Saturday 18th of May 2024 04:21:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனிமைப்படுத்தலில் இருந்த குடும்பத்தாருடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்!  தனிமைப்படுத்தலில் கிராம அலுவலர்!

தனிமைப்படுத்தலில் இருந்த குடும்பத்தாருடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்! தனிமைப்படுத்தலில் கிராம அலுவலர்!


யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பொற்பதி கிராமத்தில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குடும்பத்தாரின் வீட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் கிராம அலுவலர் ஒருவர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பொற்பதிக்கு திரும்பிய நான்கு குடும்பத்தினர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஒரு குடும்பத்தாரின் வீட்டிலேயே குறித்த கொண்டாட்டத்தில் கிராம அலுவலர் பங்குகொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவருடைய வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொற்பதிக் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு குடும்பத்தினரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கே இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE